ஆவின் நிறுவனத்தில் 10 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் வழங்கல்!
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் பணிக்காலத்தில் உயிரிழந்த 47 நபர்களின் வாரிசுகள் 10 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணி நியமனம்:
தமிழகத்தில் அரசு ஆவின் பால் நிறுவனம் மூலம் 26.68 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனம் 4.36 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது.
அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் பால் பொருட்களை ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யவும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக வருடத்துக்கு சுமார் 60 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 6 கோடி ரூபாய் லாபம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு!
முதற்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வணிக ஒப்பந்த ஆணைகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து ஆவின் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 47 நபர்களின் 10 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் பேரறிஞர் அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நல நிதி திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.