வெளிநாடுகளில் பணியாற்ற விரும்பும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் பணி புரிய அனுபவமுள்ள மருத்துவர்கள் தேவைப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தை விட்டு அயல்நாடுகளில் பணி புரிய வேண்டும் என்று ஆசை உள்ளவரா உங்களுக்கான பதிவு தான் இது. சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவ மனைகளில் பணியாற்ற அனுபவமுள்ள மருத்துவர்கள் தேவைப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து வெளியிட்ட அறிவிப்பை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் குறிப்பாக அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் பணியாற்ற தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
TNPSC Group 2, 2A தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – மைனஸ் மதிப்பெண் முறை வெளியீடு!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியிடத்திற்கு கன்சல்டன்ட் மருத்துவர்கள், 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இப்பணியிடத்திற்கான மாத சம்பளம் குறித்த தகவல்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற முகவரிக்கு தங்களின் சுயவிவரக்குறிப்பு, தகுதி சான்றிதழ், அனுபவம் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவை அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை 95662 39685, 044 2250 5886, 2250 2267 போன்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அயல்நாட்டில் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.