தமிழக அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!
தமிழகத்தின் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பேரிடர் மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல் தவித்தனர். அதன் பின்னர் அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு..! வாரத்தின் 5 நாட்கள் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கம்!
அதன்படி, அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பேரிடர் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ரேடியோகிராபர் 5, டயாலிசிஸ் டெக்னீசியன் 10, இ.சி.ஜி டெக்னீசியன் 5, சி.டி ஸ்கேன் டெக்னீசியன் 5, மயக்கவியலாளர் 15, மருந்தாளுனர்கள் 5 ஆகிய பணிகளுக்கு காலி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.12000 ஊதியம் அடிப்படையிலும், லேப் டெக்னீசியன் 5 பணியிடங்களுக்கு மாதம் ரூ.15000 ஊதியம் அடிப்படையிலும் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இந்த பணியிடங்களை எந்த காரணத்திற்காகவும் பணி வரன் முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த பணிகளில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்களை புகைப்படத்துடன் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.