இந்திய ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை!
இந்திய அரசின் ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பிற்கு முயற்சிக்கும் புதியவர்கள் எளிதாக எவ்வாறு கண்டறிதல், விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் காணலாம்.
ரயில்வே பணி:
இந்திய ரயில்வே துறை என்பது அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். ரயில்வே துறையில் பல லட்சக்கணக்கான பணியாளர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே துறை தனக்கு தேவையான அனைத்து பணியாளர்களையும் தனி வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி தேர்வு செய்கிறது. பணியாளர்கள் தேர்வு செய்யும் முறை மற்றும் இது தொடர்பான விவரங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு அமைப்பின் மூலம் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் சிறந்த மகளிர் குழுக்களுக்கு “மணிமேகலை விருது” – அமைச்சர் அறிவிப்பு!
மேலும், நாளிதழ்களில் ரயில்வே பணியிடம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். தற்போதைய காலகட்டத்தில் காலியிடங்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டலங்கள் அல்லது ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கின்றது. ஆனால் பணியிடங்கள் தொடர்பாக போலியான அறிவிப்புகள் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுவதை நம்பக் கூடாது. மேலும், விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
இதற்காக இணையத்தில் விண்ணப்ப படிவம், சோதனை சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவற்றிற்கான இணைப்பும் கொடுக்கப்படுகின்றது. வேலை பற்றிய விவரங்கள், தகுதிகள், தேர்வு செயல்முறை போன்ற அனைத்து அறிவிப்பும் கொடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் முன் முழுவதுமாக படிக்க வேண்டும். தேர்வு அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் தெரிவிக்கப்படும். சமீப காலத்தில், நாம் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
எனவே, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களை முறையாக பின் தொடர வேண்டும். வேலைவாய்ப்பு செய்தித்தாளை தொடர்ந்து படிக்க வேண்டும், ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு முடியும் வரை தெரிவிக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த வேண்டும்.