தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!

0
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! முழு விபரம் இதோ!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அத்துடன், தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பதிவு துவக்கம்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களே நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இந்த உத்தரவு ரத்து செய்யக்கோரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம். மேலும் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரியவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம். தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம். மேலும் பள்ளிக்கு அருகே மாவட்டத்திற்கு வசிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளித்து ஆசிரியர்களாக நியமிக்கலாம். மேலும் திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இதையடுத்து இடைநிலை ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 1 ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 2 -வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020 ல் வெளியான அரசாணையின் படி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ஜூலை 31 க்குள் இதை செய்தால் மட்டுமே ரூ.2000 கிடைக்கும்!

மாவட்டக் கல்வி அலுவலர் பெறும் விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!