நீட் தேர்வு 2021 விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவின் நடப்பு ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 14 வரை ஏற்கனவே பதிவு செய்தவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு – இன்று முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்!
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். இந்தாண்டு முதல் இது 200 கேள்விகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிற்சி மையங்களில் ஆன்லைன் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் இணையம் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறும் நீட் தேர்விற்கு நடப்பு மாதம் ஆகஸ்ட் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என NTA முன்னர் அறிவித்து இருந்தது.
TN Job “FB Group” Join Now
இன்னும் இரண்டு நாட்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடையும் நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 5 மணி வரை இது நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நர்சிங் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை ஆகஸ்ட் 11 முதல் 14ம் தேதி மதியம் 2 மணிக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.