கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி – செப்.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலுார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021 – 2022ம் கல்வியாண்ற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 2021 – 2022 ம் கல்வியாண்டு தொடங்கியது முதல் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி ஆன்லைன் / நேரடி என இருவழிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுகலை, இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆகஸ்ட் 17ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரி ரத்து – செப்.30 வரை நீட்டிப்பு!
அதனை தொடர்ந்து மற்ற படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது வேலுார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021 – 2022 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்க இணைப்பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் சான்றிதழ்களை இணைத்து வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 9வது கிழக்கு குறுஞ்சாலை, காட்பாடி, வேலூர்- 632006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 17 வயது பூர்த்தியான நபராக இருக்க வேண்டும். இப்பட்டய படிப்பில் கூட்டுறவு மேலாண்மை கணினி, நகை மதிப்பீடு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் பயிற்சி முடிந்த பின் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும்.