தமிழக அரசு வழங்கும் ஒரு சவரன் தங்க பதக்கம் & ரூ.1 லட்சம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தமிழ் பணியாற்றிய தமிழறிஞர்களை பாராட்டும் வகையில் தேவநேயப்பாவாணர், வீரமாமுனிவர் அவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தகுதி உடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழறிஞர்களுக்கு விருது:
தமிழக்ததில் தமிழறிஞர்களை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வயது முதிர்ந்த மூத்த தமிழறிஞர்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பாராட்டும் வகையில் ஆகஸ்ட் 14ம் தேதி தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ் பணியாற்றிய தமிழறிஞர்களை பாராட்டும் வகையில் தமிழறிஞர்களான தேவநேயப்பாவாணர், வீரமாமுனிவர் அவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகளை கலந்து ஆய்வு – DCGI ஒப்புதல்!
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, தனி தமிழில் அகராதிகளை உருவாக்கும் உள்நாட்டு தமிழறிஞர் ஒருவருக்கு தேவநேயப் பாவாணர் விருதும், தமிழின்பால் கொண்ட பற்றினால் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள், தமிழ் அகராதி போன்றவை உருவாக்கிய வெளிநாட்டை சேர்ந்த தமிழறிஞர் ஒருவருக்கு வீரமாமுனிவர் விருதும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விருது பெற தகுதியான தமிழறிஞர்கள் www.sorkuvai.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்ய வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு – முதல்வரின் சிறப்பு விருதுகள்!
அந்த விண்ணப்பத்துடன் தமிழ் பணி ஆற்றிய கல்லூரி அல்லது பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மற்றும் அகராதியில் வல்லுநர் இருவரின் பரிந்துரை சான்றிதழகளையும் இணைத்து, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர நிர்வாக அலுவலகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி நகர் சென்னை 6000028 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவே அல்லது மின்னஞ்சல் மூலமாவோ ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் பரிந்துரைப்பவர்களின் விவரங்களும் விண்ணப்பங்களில் இடம் பெற வேண்டும். இந்த விருது பெறும் அறிஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்க பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.