TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தற்போது தேர்வின் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
TNPSC குரூப் 4 & VAO :
தமிழகத்தில் 2022 ஆண்டு தொடங்கியது முதல் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 2,2A தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில் மே 21ம் தேதி (சனிக்கிழமை) தேர்வு நடைபெறும் பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ம் தேதி வரை குரூப் 2,2A தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக TNPSC குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியானது.
மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – நகர நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
இந்த TNPSC குரூப் 4 & VAO தேர்வானது இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் (ஏப்ரல் 28) முடிவடைய உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. இதில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.
Exams Daily Mobile App Download
ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் இருக்கும். இரண்டு பகுதிகள் இருக்கும் முதல் பகுதியில் 100 வினாக்கள் இடம்பெறும். தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் வினாக்கள் இடம்பெறும். அடுத்ததாக 75 மதிப்பெண்களுக்கு பொது அறிவு வினாக்களும் , 25-திறனறி தேர்வு வினாக்கள் இடம் பெறும். அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். மேலும் நடப்பு நிகழ்வுகள், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும்.