இந்தியாவில் 100% செயல்திறன் கொண்ட நோவாவாக்ஸ் தடுப்பூசி – செப்டம்பர் மாதத்தில் பயன்பாடு!!
இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்குள் 100 சதவீத செயல்திறன் கொண்ட நோவாவாக்ஸ் என்ற புதிய தடுப்பூசி செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும்,குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தடுப்பூசி:
கொரோனா தொற்றின் பாதிப்பிற்கு பின்னர் அதற்கான தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் மத்திய அரசு அறிவித்துள்ள முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என்ற இரு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு பயந்து வந்தனர்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் – தொலைபேசி எண் அறிவிப்பு!
பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுபற்றிய விழிப்புணர்வுகளை அளித்த பின்னர் பெருமளவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடங்கினர். இதனால் நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையில் உள்ளது. கடந்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கான தேவை இன்னும் அதிகரித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
தற்போது அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கும் பணிக்கு புனேவின் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான சோதனைகள் விரைவில் முடிவடைந்து வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். மேலும், நோவாவாக்ஸ் 100% செயல்திறன் கொண்டது என்றும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பற்றிய சோதனைகள் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.