10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – விண்ணப்பம் வரவேற்பு!

2
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பம் வரவேற்பு!
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பம் வரவேற்பு!
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு – விண்ணப்பம் வரவேற்பு!

இந்திய அஞ்சல் துறையில் முகவர் பணிக்கான புதிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் துவங்கி 50 வயதுடையவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

தமிழகத்தில் பட்டதாரி மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகளை இந்திய அஞ்சல்துறை பெற்று தருவதாக அறிவித்துள்ளது. அதன் படி ஆயுள் காப்பீட்டுத் துறையில் நேரடி முகவர்களுக்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் 50 வயதுள்ளவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை நகர வடக்கு கோட்டத்தில் செயல்பட்டு வரும் அஞ்சல் துறைகளில் புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

அர்ஜுனை சுட்ட போலீசார், ரோஜாவை ஆள் வைத்து அடித்த சாக்ஷி – ட்விஸ்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!

அதாவது அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்களை பணியமர்த்துவதற்கான தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயது வரையுள்ள சுய தொழில் செய்பவர்கள், வேலை இல்லாதவர்கள், முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் உட்பட மற்ற அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது பாஸ்போர்ட் புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம், சென்னை – 600 008 என்ற முகவரியில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை ஆணையர்!

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் நபர்கள், சென்னையின் பூங்கா நகர், வேப்பேரி, எழும்பூர், செயின்ட் ஜார்ஜ், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஓட்டேரி, வண்ணாரப்பேட்டை, அயனாவரம், ராயபுரம், ஷெனாய் நகர், சேத்துப்பட்டு, ஐ.சி.எஃப், வியாசர்பாடி, அமைந்தகரை, அண்ணா நகர், தண்டையார் பேட்டை, ஜவஹர் நகர், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு, சென்னை உயர் நீதிமன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!