TNPSC Group 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

0
TNPSC Group 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
TNPSC Group 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
TNPSC Group 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

தமிழகத்தில் அரசு பணிகளின் அடிப்படையில் TNPSC தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 2A, குரூப் 4 மற்றும் குரூப் 5, 6, 7, 8 ஆகிய வகைகளில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு வரும் 21ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், குரூப் 2 தேர்வை எழுத 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

விதிமுறைகள்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மொத்தம் 5831 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வருகிற 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில், நேர்முக பணியிடங்களின் எண்ணிக்கை 116, நேர்முக அல்லாத பணியிடங்கள் எண்ணிக்கை 5413 ஆகும்.இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு பிப்ரவரி 23 முதல் தொடங்கி மார்ச் 23 உடன் நிறைவடைந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு எழுத விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பெற்றவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இந்த தேர்வின் மொத்த மதிப்பெண் 300 ஆகும். தேர்வில் 90 மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக கருதப்படுவார்கள். இந்நிலையில் குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வாணையத் தலைவர் பாலச்சந்திரன் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில் மே21ம் தேதி நடத்தப்படும் முதல் நிலை தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் அறிவிக்கப்படும். ஒரு பணியிடத்திற்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். குரூப் 2 தேர்வை 79,000 பேர் தமிழில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக 11.78 லட்சம் பேர் குரூப் 2 தேர்வை எழுத விண்ணப்பித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. சென்னை மட்டும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் ( மே 20) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் இதுவரை 9.10 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 5,000 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும். மேலும் 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!