தமிழகத்தில் சாதி & மதம் இல்லை என சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களா? ஐகோர்ட் புதிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான முக்கிய ஆவணங்களில் சாதி சான்றிதழ் ஒன்றாகும். இதனை தொடர்ந்து சாதி, மதம் இல்லை என சான்றிதழும் தற்போது பெற்று கொள்ளலாம். இந்த சான்றிதழ் விண்ணப்பித்தவர்களுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சான்றிதழ்
தமிழகத்தில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு மற்றும் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றிற்கு சாதி சான்றிதழ் அவசியமானதாகும். இதனை தொடர்ந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சாதி மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதனால் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் சாதி சான்றிதழ் வாங்க வேண்டும். இந்த சாதி சான்றிதழ் தந்தை, தாய் வழி சாதி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் இச்சான்றிதழ் தமிழக அரசின் வருவாய் துறையால் வழங்கப்படுகிறது.
இச்சான்றிதழில் சம்மந்தப்பட்டவரின் சாதி, பிரிவு, மதம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படுகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்க்க இயலும். இந்த நிலையில் கடந்த 1973ம் ஆண்டு மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிட தேவையில்லை என்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் சாதி, மதம் இல்லை என சான்றிதழுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் இதனை பெறுவதில் கால தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
MBBS படிப்புகளுக்கு நிலவும் கடும் போட்டி – அதிர்ச்சியில் மாணவர்கள்!
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மனோஜ் தனது மகன் யுவன் மனோஜுக்கு சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அக்டோபர் மாதம் தன் மகனை பள்ளியில் சேர்க்க உள்ளார். இதனால் சாதி, மதம் இல்லை என சான்றிதழை உடனடியாக தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அம்பத்தூர் தாசில்தார் இந்த சான்றிதழை இதுவரை வழங்கவில்லை. அதன் காரணமாக இவர் இது தொடர்பாக மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சாதி, மதம் இல்லை என சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Onlineல் இதை எப்படி விண்ணப்பிப்பது?