18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மாநில அரசுகள் அறிவிப்பு!!
உத்தரகண்ட் மற்றும் ஆந்திர மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக உத்தரகண்ட் மற்றும் ஆந்திர அரசு 18 வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. கடந்த வருடத்தை விட தற்போதைய கொரோனா இரண்டாம் அலை வெகுவிரைவாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10,759 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமாக பரவும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிறுத்தம் – திடீர் அறிவிப்பு!!
மேலும் உத்தரகண்ட் மாநிலத்திலும் புதிதாக 3998 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 பேர் பலியாகியுள்ளனர். எனவே அம்மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்