அக்.1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!

0
அக்.1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் - எவற்றுக்கெல்லாம் அனுமதி!
அக்.1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் - எவற்றுக்கெல்லாம் அனுமதி!
அக்.1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை மாநில அரசு தளர்த்தியுள்ளது. அதன் கீழ் சினிமா அரங்குகள் வரும் அக்டோபர் 1 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

மாநிலம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த கர்நாடகா அரசு, ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. இருந்தாலும், செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் கீழ், அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் அக்.30 வரை முழு ஊரடங்கு அமல்? உண்மை நிலவரம் இதுதான்!

மேலும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் அனைத்தும் செயல்பட உள்ளது. இதற்கிடையில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு, 1%க்கும் குறைவான நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அனுமதி கொடுத்துள்ளது. குறிப்பாக இம்மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.

அக்.4 வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தொடர்ந்து கேரளா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள உள்ள கர்நாடகா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு தொடரும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதாவது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது கர்நாடகாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி,

  • முதலாவதாக 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்திற்கு 5 நாட்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • வார இறுதி நாட்களில் பள்ளிகளில் சுத்திகரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும்.
  • 1 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
  • தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும்.
  • அக்டோபர் 3 முதல் பப்கள் திறக்கப்படலாம்.
  • கர்ப்பிணி பெண்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
  • சினிமா அரங்குகள், மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளக்ஸ், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் அனைத்தும் 100 சதவீத இருக்கை திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • இதற்கிடையில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று (செப்டம்பர் 24) ஒரு நாளில் 789 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 23 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!