மீண்டும் தோன்றியுள்ள மற்றொரு ஆபத்தான வைரஸ் – தடுப்பூசிக்கும் கட்டுப்படாது! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் இது போன்று மற்றொரு ஆபத்தான வைரஸ் இந்த நாட்டில் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோஸ்டா-2 வைரஸ்
சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது படிப்படியாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸுக்கு எதிராக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றம் அடைந்து முன்பை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக மாற்றமடைகிறது. இப்போது கொரோனா யுத்தத்தில் ஓரளவு வெற்றி பெற்று தொடரும் பரவலானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இனி Amazon, Flipkart செயலிகளுக்கு குட் பை… மத்திய அரசு உருவாக்கிய புதிய தளம்!!
அதன் காரணமாக கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது உலகம் முழுவதும் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதன்படி உலக பொருளாதாரமும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், ரஷியாவில் கொரோனா பெருந்தொற்றை போன்று மற்றொரு ஆபத்தான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வெளவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு புதியவகை வைரஸ் ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த புதிய வகை வைரஸிற்கு கோஸ்டா-2 என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கோஸ்தா வைரஸின் முதல் வகையானது கடந்த 2020ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது இதன் 2 வகை வைரஸ் தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோஸ்தா வைரஸின் 2வது வகை மனிதர்களிடையே பரவினால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர். அத்துடன் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகள் இந்த கோஸ்டா-2 வைரசை கட்டுப்படுத்தாது எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்