தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்வு!
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றான பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி ஏராளமான மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற முடியும். இது குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறும்பான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் ஆகிய மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று கல்வி உதவித்தொகை திட்டம் பள்ளி படிப்பு முதல் உயர் கல்வி வரை அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த திட்டம் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர ஊக்குவிக்கிறது. பள்ளி, மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதமும் அதிகரிக்கிறது. இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர அந்தந்த கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது மத்திய அரசு ஒரு சலுகையை அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகையை பெற முடியும்.