தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் 25 ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இதனால் ஜூன் 7 வரை தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க முதல் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2000 மே மாதமே வழங்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – முதல்வர் பதில் உரை!
அதன் பின்னர் இரண்டாம் தவணை தொகை மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 15 முதல் இந்த பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கப்பட்டு பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி அடிப்படையில் சென்று பொருள்கள் மற்றும் ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
டோக்கன் வாங்காதவர்களுக்கு மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் சென்று வாங்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, கடந்த ஜூன் 15 முதல் கொரோனா நிவாரணம் தொகை மற்றும் இலவச மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் 25க்குள் அனைத்து அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை கடைசி நாள் என்பதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர்.