தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் அளித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, திமுக கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதாவது கடந்த மே மாதத்தில் தமிழகத்தின் புதிய முதல்வராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பால் விலை குறைப்பு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தார். அந்த வகையில் கூட்டுறவு வங்கியில் பெற்றுள்ள நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
இதனிடையே நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். முன்னதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, செத்தவரை கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘தமிழகத்தில் உள்ள சில கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்டுள்ள கடன் தொடர்பான முறைகேடுகள் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!
இந்த பணிகள் முடிந்ததும் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதே போல கூட்டுறவு சங்கங்களில் நில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டமும் பரிசீலனை செய்யப்படும். தொடர்ந்து கோயில் நிலங்கள், கல்லூரி மற்றும் பள்ளி இடங்கள், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சர்வே நம்பர் மூலம் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து முறையான விசாரணை செய்யப்பட்ட பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.