திண்டுக்கல் மாவட்டத்தில் நவ. 28ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை தகுதியும், விருப்பமும் உள்ள வேலையற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு இளைஞர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இசைவாணி செய்த காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகமானது திண்டுக்கல் மாவட்டத்தில் MVM மகளிர் அரசு கலைக்கல்லூரியில் வரும் நவ.28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, கரூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 – முதல்வரின் திட்டம் என்ன?
அதாவது, டெக்ஸ்டைல்ஸ், மோட்டார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம், கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அதனால் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்த அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது சுயவிபரப்படிவம், ஆதார், ரேஷன் கார்டு, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்று உள்ளிட்ட ஆவணங்களோடு நேரில் சென்று பயன்பெறுமாறு அம்மாவட்ட கலெக்டர் ச.விசாகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.