ஜூலை 19, 22ம் தேதிகளில் திட்டமிட்டபடி SSLC தேர்வு – முதல்வர் அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்தில் திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை என்பதையும் விளக்கியுள்ளார்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு:
கர்நாடக மாநிலத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்று மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பொது தேர்வு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அவர்கள் ஆலோசனை நடத்தி, பின் இது குறித்த முடிவை வெளியிட்டார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு ஜூலை 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் கொரோனா அச்சம் காரணமாக ஒரு பெஞ்சுக்கு 1 நபர் வீதம் ஒரு வகுப்பறையில் 12 மாணவர்கள் மட்டுமே அமர்த்தப்படுவர் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பொது தேர்வு நடத்துவது தொடர்பாக என்னிடம் எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
தற்போது இதனை விளக்கும் வகையில் மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அவர்கள் பொது தேர்வு தொடர்பாக என்னிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்பே தேதியை அறிவித்தார். அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்கவில்லை. மாணவர்கள் நலன் குறித்து ஆலோசிக்கப்பட்ட பின்பே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாநிலத்தில் திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று மாநில முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.