அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு – புதிய அரசு நடவடிக்கை!

0
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு - புதிய அரசு நடவடிக்கை!
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு - புதிய அரசு நடவடிக்கை!
அடுத்த 12 மணிநேரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு – புதிய அரசு நடவடிக்கை!

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் இப்போது புதிய அமைச்சரவையை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாடு தழுவிய முழு ஊரடங்குச் சட்டம் இன்று (மே.14) ஒரு நாள் மட்டும் 12 மணிநேரத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த சில வாரங்களாக போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. அதாவது, நாடு முழுவதும் உள்ள மக்கள் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில் விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு ஆகியவையும் குடிமக்களை பாதித்துள்ளது. இதற்கு காரணம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச என எண்ணிய மக்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னரும் அந்நாடு வன்முறைகளாலும் போராட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஐந்து முறை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் ஆறாவது முறையாக மீண்டும் பதவியேற்றப்பட்டார். இப்போது நாடு முழுவதும் ஒரு அரசியல் குழப்பத்தை கடந்து செல்லும் நிலையில், இன்று (மே.14) ஒரு நாள் மட்டும் 12 மணிநேர ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அரசு தெரிவித்துள்ளது. இப்போது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 8.13% வரை ஊதிய உயர்வு!

அந்த வகையில், இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை அமைக்க முயற்சிப்பதால், நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் சனிக்கிழமை 12 மணிநேரத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீக்கியது. முன்னதாக, வன்முறை மோதல்களைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட முழு ஊரடங்கில் இருந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தளர்வுகளை அளித்த அரசாங்கம், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதி அளித்தது.

இப்போது, இலங்கையில் உள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், கடனில் சிக்கித் தவிக்கும் நாட்டை விரைவாக மீட்டெடுக்க உதவுவதற்காக வெளியில் இருந்து பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் தாக்குதலைத் தூண்டியதற்காக முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!