தமிழகத்தில் வருகிற ஜூலை 10ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
தமிழகத்தில் முஸ்லீம் பண்டிகையான தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை வருகிற ஜூலை 10 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த நாளில் தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை விட இருப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை:
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் பக்ரீத் பண்டிகை. இந்த நாள் ஒரு தியாக திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஆடு, ஒட்டகம் போன்ற உயிர்களை கடவுளுக்கு படைத்து அதை குடும்பத்துடன் சமைத்து சுற்றி இருக்கும் நண்பர்களுக்கு வழங்கி அன்றைய தினத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை ஜூலை 1 ஆம் தேதி தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்த நாள் முஸ்லீம் பண்டிகையாக இருந்தாலும் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் பிரியாணி வழங்கி சந்தோஷப்படுவார்கள்.
அந்த வகையில் பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி கொடுக்க ஆடுகள், செம்மறிஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மேலப்பாளையம் கால்நடை விற்பனை சந்தையில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் செம்மறி ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கி இருக்கின்றனர். மேலும் பக்ரீத் பண்டிகைக்காக இஸ்லாமிய சகோதரர்கள் புது உடை வாங்கி தயாராகி வருகின்றனர்.