தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்கனவே ஜூன் 13 ஆம் தேதி திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பள்ளிகள் ஜூன் இறுதி வாரத்தில் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டுக்கான தேர்வு தேதி அறிவிப்புகளையும் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வருடங்களாகவே 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படியே, தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடந்து வருகிறது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மே 13ம் தேதியுடன் முடிவடைந்தது.
TN Job “FB Group” Join Now
பின்பு மே 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இந்நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17 ம் தேதி வரை தொடங்கி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு பணிகள் நிறைவடைய கால தாமதம் ஏற்பட உள்ளதால் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஜுன் 20 அல்லது 27ம் தேதி இருக்கலாம் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.26,000 வரை ஊதிய உயர்வு? நாளை முக்கிய அறிவிப்பு!
எனவே பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் இடையே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.