தமிழகத்தில் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் திறப்பு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இறைச்சி கடைகள்:
தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் விதிக்கப்பட்டிருந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று காலை 6 மணி முதல் முடிவுக்கு வந்ததை அடுத்து இன்று முதல் வருகின்ற ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளும் மீதமுள்ள மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி, மளிகை, பழங்கள், பூ, இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கோயம்பேடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், பூ விற்பனை செய்யும் மொத்த சந்தைகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
இன்று முதல் மத வழிபாட்டு தலங்கள், கடைகள் திறப்பு – கல்வி நிறுவனங்கள் மூடல்!
ஆனால் மொத்த விற்பனை சந்தைகளில் இயங்கும் சில்லறை கடைகளில் விற்பனை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் மாநகர சுகாதாரத்துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.. அப்போது அவர்கள் கூறியதாவது, மொத்த மீன் மார்க்கெட்டில் மக்களுக்கு மொத்த விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கடைகளில் மக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், சமூக இடைவெளியை முறையாக மக்கள் பின்பற்றவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.