பென்ஷன் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு – முழு விவரம் இதோ!
அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் முதலீடு செய்யும் சிறந்த பென்சன் திட்டமாக National Pension System (NPS) எனப்படும் தேசிய பென்சன் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பென்சன் திட்டத்தில் புதிய விதிமுறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பென்சன் திட்டம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பல பென்சன் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு சார்பில் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்து ஓய்வு காலத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை பென்சாக பெற வழிவகை செய்கிறது National Pension System (NPS) எனப்படும் தேசிய பென்சன் திட்டம். தேசிய பென்சன் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால் பணி ஓய்வின்போது மொத்த நிதியில் குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு மீதத் தொகையை மாதம் தோறும் பென்சனாக பெற்றுக் கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தில் Tier 1, Tier 2 என இரண்டு வகையான தேசிய பென்சன் திட்ட கணக்குகள் இருக்கின்றனர். இந்த தேசிய பென்சன் திட்ட கணக்கில் நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு இரண்டு முறை வரை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் தற்போது இந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய விதிமுறைப்படி ஆண்டுக்கு நான்கு முறை உங்கள் நிதி ஒதுகீட்டை மாற்றலாம். ஆனால் இது Tier 1 கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு – அக்னிபாத் திட்ட எதிரொலி!
இருந்தாலும் பென்சன் நிதி நிர்வாகியை (pension fund manager) ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களை தவிர தனியார் துறை ஊழியர்கள் தேசிய பென்சன் திட்டத்தில் அதிகம் முதலீடு செய்து வருவதாக பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் நிதியில் அதிகபட்சமாக 50% வரை பங்குச் சந்தை முதலீட்டுக்கு ஒதுக்கிக்கொள்ளலாம் என்பதே திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.