ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு – மலிவு விலை 4ஜி போன்கள் அறிவிப்பு!!
இந்தியாவின் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஜியோ,தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்து டெலிகாம் துறையில் பெரும் புரட்சியைச் செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம்:
இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு முன்னணி தொலைபேசி நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. குறைந்த விலையில் டேட்டா பிளான் வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தை இந்த நிறுவனம் பிடித்துள்ளது. தனது 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்து டெலிகாம் துறையில் பெரும் புரட்சியைச் செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் நேரத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சிறப்பு திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவான ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் பங்குகளை 2020 ஆம் ஆண்டு விற்பனை செய்து, ல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தில் கூகிள் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. இந்த திட்டம் மூலமாக கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள்-ஐ பயன்படுத்தி ஸ்மார்ட்போன்-ஐ மிகவும் மலிவான விலையில் உருவாக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசுக்கு கோரிக்கை!
இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது R&D பணிகளைத் தாண்டி தற்போது தயாரிக்கும் பணியைத் துவங்கியுள்ளது. இதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களில் இருந்து உதிரி பாகங்கள் வாங்கும் பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விங்க்டெக் மொபைல்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், யூடிஎல் நியோலின்க்ஸ், பிளெக்ஸ்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் விலை 5 டாலருக்கு கீழ் இருக்கும் எனவும், இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.