ஏப்ரல் 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? மாநில அரசு விளக்கம்!
ஏப்ரல் 22ம் தேதியன்று கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கும் ஏப்ரல் மாதம் பல்வேறு பண்டிகைகளுடன் நிரம்பி வழிவதால் ஏகப்பட்ட விடுமுறைகள் காணப்படுகிறது. ஏற்கனவே இம்மாதத்தில் முடிவடைந்த 18 நாட்களில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, வங்கி விடுமுறை, மத விடுமுறை என கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் விடுமுறைகள் இருந்தது. இவை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டிருந்தது. அந்த வகையில் தற்போது மீண்டுமாக ஏப்ரல் 22ம் தேதியன்று கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – குஷியில் பணியாளர்கள்!
அதாவது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிகளில் வரும் ஏப்ரல் 22ம் தேதியன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 22ம் தேதி ஒரு நாள் மட்டும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், ‘கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிக்குட்பட்ட இடங்களில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கித்துறை நிறுவனங்கள், தேயிலை நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 22ம் தேதியன்று மூடப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!
இதற்கு முன்னதாக மார்ச் 31ம் தேதி நடக்கவிருந்த கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் ராங்ஹோலி பிஹு பண்டிகையை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டு ஏப்ரல் 19 முதல் 22ம் தேதிகளில் மாற்றி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரை மேற்கொள்ளப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.