திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – அலைமோதும் கூட்டம்! பொதுமக்கள் அவதி!
இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து தான் காணப்படும். வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். இந்த நிலையில் பரவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் பக்தர்கள் வருகை நிறுத்தி வைக்கப்பட்டது. தினசரி பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. அதனால் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? அரசு தரப்பு முடிவு என்ன!
ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் கோயில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 75 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசன செய்து வருகின்றனர். வார இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 73,358 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதில் 41, 900 பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சனிக்கிழமையான நேற்று திருமலையில் உள்ள வைகுண்டம் காம்ப்பளக்சில் உள்ள 31 அறைகள் பக்தர்கள் எண்ணிக்கையால் நிரம்பியது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசைகளில் 3 கி.மீட்டர் தூரத்துக்கு நின்று காத்திருந்து தரிசனம் செய்தனர். விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பிராசாதத்திற்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.