ஈரோடு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் மாத மின்கட்டணம்!
நடப்பு ஆண்டு ஜூன் மாத மின் கட்டணத்திற்கு, கடந்த வருட ஜூன் மாத தொகையை செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரோடு மின் பகிர்மான கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூன் மாத மின்கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை விரைவாக பரவி வருகிறது. அரசு தடுப்பு பணியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சாலைகளில் நடமாட முற்றிலும் தடை விதிக்கப்பட்டு மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்ல அரசின் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவல் குறையாத காரணத்தால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தொற்று காலத்தில் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு, கடைகளுக்கு நேரில் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி – ஜூன் 25 முதல்!
அதனால் இந்த வருடம் மே மாத மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் 3 சலுகைகளை மின் நுகர்வோருக்கு அளித்தது. கடந்த வருடம் மே மாத தொகையை இம்மாதம் செலுத்தலாம் அல்லது இந்த வருடம் மார்ச் மாத தொகையை மே மாத கட்டணமாக செலுத்துவது அல்லது வீட்டின் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பி அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு செலுத்தலாம் என்ற சலுகைகளை தமிழ்நாடு மின்வாரியம் அளித்தது. இதில் பல குழப்பங்கள் நிலவுவதாக புகார்கள் எழுந்தது. பின் அவை சரி செய்யப்பட்டு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா ஊரடங்கு ஜூன் மாதம் முழுவதும் நீட்டிக்கப்பட்டிருப்பதால் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்யவில்லை. அதனால் கடந்த வருட ஜூன் மாத தொகையை நடப்பாண்டு ஜூன் மாத தொகையாக செலுத்த வேண்டும். அவை அதிகமாக இருப்பதாக கருதினால் கடந்த ஏப்ரல் மாத தொகையை செலுத்தலாம். கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் வரும் ஆகஸ்ட் மாத மின்கட்டணத்தின் போது சரி செய்யப்படும். மேலும் ஈரோடு மின் நுகர்வோர்கள் தங்கள் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து ஈரோடு செயற்பொறியாளர் 94425 91822, ஈரோடு மின் பகிர்மான மேற்பார்வையாளர் 94458 51900 வாட்ஸ் அப் மூலம் அனுப்பி அதற்கான தொகையை செலுத்தலாம் எனவும் ஈரோடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.