கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – பொது நிகழ்ச்சிகளில் அனுமதி இல்லை!
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
தடுப்பூசி:
கொரோனா தாக்கம் நாடு முழுவதும் கடுமையாக பரவி வந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை அடைந்த நிலையில் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.
அக்.21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மாநில அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கொரோனா தொற்றானது முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவி வந்த காலகட்டத்தில் மீண்டும் கொரோனா பரவும் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அந்தந்த நாடுகள் ஊக்கப்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு சலுகைகளும் வழங்கி வருகிறது.
தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை – முதல்வர் தொடக்கி வைப்பு!
இந்நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடைந்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.