தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – அக்.10 மீண்டும் மெகா முகாம்!
கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்த வேண்டிய கால அவகாசம் முடிவடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களின் விவரங்களை சேகரிக்க சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கொரோனா வைரஸ் பரவல் நன்கு குறைந்து வருகிறது. அதனால் அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. விரைவில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி முற்றிலும் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு முயற்சிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அக்.11 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
அதன்படி தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாக்கு மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் இந்த மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே போல கடந்த 3 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட முகாம் நடத்தப்பட்டு 17 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து 5 ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 10 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெறவுள்ளது. இதில் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் கால அவகாசம் முடிந்தும் இன்னமும் 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். தற்போது நடைபெறவுள்ள தடுப்பூசி முகாமில் 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்தும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.