10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு – மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு – மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளைக்குள் (ஜூன் 29) மறுகூட்டல், விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுகூட்டல், விடைத்தாள் நகல்:

தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி அன்று 10,12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 93.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகளை தொடர்ந்து மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுதல் போன்றவற்றிற்கான அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ ஆகியவற்றில்‌ எதாவது ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதனால் எதற்கு விண்ணப்பிக்க போகிறார்கள் என்பதை தெளிவான முடிவு செய்து கொண்டு அதன் பின்னர்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்த ஒப்புகை சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அதில் உள்ள எண்ணை பதிவிட்டு முடிவுகளை அறியலாம்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய நடைமுறை – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

விடைத்தாள் நகல் பெறுவதற்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைந்த உள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்ட கல்வி அதிகாரி மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!