தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் குறித்த முடிவு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கல்வித்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
மதிப்பெண்கள் முறை:
கொரோனா பேரிடர் காரணமாக மே மாதம் 5 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டது. அந்த பொதுத்தேர்வுகளை மீண்டும் நடத்துவது தொடர்பான பல கட்ட ஆலோசனைக்கு பின்னாக தேர்வுகளை ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான ஆன்லைன் வகுப்புகளின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியதாவது, ‘மாணவர்களின் பொது நலன் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.
பாரதி கண்ணம்மா வெண்பா, அஞ்சலியின் நோ மேக்கப் ரீல்ஸ் – என்ன கொடுமை சார் இது!!
அந்த முடிவு அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். அதே போல பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளும் தயாராகி விட்டது. இதுவும் விரைவில் வெளியிடப்படும். மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு எந்த காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.