தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பயிற்சி வழங்கப்பட்டு அனைவரும் அர்ச்சகராக பணி புரியலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பயிற்சி பள்ளிகளில் விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அர்ச்சகர் பணி:
தமிழகத்தில் திமுக தலைமையிலானா புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசின் துறைகளின் பெயர்களும் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. துறைகளுக்கான அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஜூன் 21 முதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை ஆலோசனை!!
அதேபோல், தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதிரடி அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார். மேலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை அனைத்து கோவில்களில் வைக்கப்படும் என்றும், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர், கைபேசி எண் போன்றவையும் அறிவிப்பு பலகையில் இடம்பெறும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் புதிதாக 2000 மருத்துவர்கள் நியமனம் – அமைச்சர் தகவல்!
அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை பொது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராக பணி புரியலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் சீரமைக்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.