1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
தேர்ச்சி அறிவிப்பு
கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா பேரலைத்தொற்று சூழலுக்கு மத்தியில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டது. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வந்த குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான கொரோனா 3ம் அலைப்பரவலுக்கு பின்பாக 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக கொரோனா தொற்று சூழலில், பள்ளிகளில் தேர்வுகளை நடத்த முடியாததால் கடந்த 2 ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதாவது, கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை கருத்தில் கொண்டு 1 முதல் 9 வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் ரூ.26,000 வரை உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!
ஏனென்றால், நடப்பு கல்வி ஆண்டில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு சரியாக வகுப்புகள் நடத்தப்படாததால் 1 முதல் 9 வரையுள்ள அனைத்து வகுப்புகளும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்றபடி, பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆப்லைன் முறையில் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.