தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து கல்வித் துறையின் அறிவிப்பு!

0
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்து கல்வித் துறையின் அறிவிப்பு!
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பாடத்திட்டம் குறித்து கல்வித் துறையின் அறிவிப்பு!
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து கல்வித் துறையின் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் நலனுக்காக மாற்றப்பட்ட சலுகைகளில் சிலவற்றை தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் படி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகள்:

கொரோனா பரவல் காரணத்தினால் பள்ளிகள் ஏதும் செயல்படாமல் ஆன்லைன் வாயிலாகத்தான் 1முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஓரளவு வைரஸ் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தேர்வுகளும் முடிந்தது. இவ்வாறு கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டு மாணவர்கள் கற்றலில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த சமயம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட தமிழக அரசு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குறைந்தளவு பாடம் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு 35% அளவிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 39% அளவிலும் மற்றும் 11, 12ம் வகுப்புகளுக்கு 35% அளவு மட்டுமே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளும், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று ஜூன் 13 அன்று 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் வருகிற ஜூன் 20ல் பிளஸ் 2 வகுப்புக்கும், ஜூன் 27ம் தேதி பிளஸ் 1 க்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

CWC புகழ் சிவாங்கி & மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!

இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு மாறி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மாணவர்களுக்கு நடத்தப்படுவது போல் இன்னும் சில மாற்றங்களை கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் வழக்கம் போலவே நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவால் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் கற்றல் இழப்பை சரிக்கட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!