ஏப்ரல் 11 முதல் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

0
ஏப்ரல் 11 முதல் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஏப்ரல் 11 முதல் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - இதற்காக தான்? அரசு விளக்கம்!
ஏப்ரல் 11 முதல் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி திங்கள் முதல் ஏப்ரல் 22 வெள்ளி வரைக்கும் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

பள்ளி விடுமுறை

மேற்கத்திய நாடுகளில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் பண்டிகை உள்ளிட்ட சில மத விழாக்கள் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் விடுமுறை காலங்களை வீட்டிலேயே செலவழிக்கவும், திருவிழாவை கொண்டாடவும் வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், மக்கள் மீண்டும் பண்டிகைகளை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் இப்போது இங்கிலாந்து மக்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறையை கொண்டாடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு வசந்த காலங்களுக்கான வங்கி விடுமுறையானது சற்று தாமதமாக வருகிறது. அந்த வகையில் ஈஸ்டர் 2022 பண்டிகைக்காக வங்கிகள் பின்வரும் நாட்களில் மூடப்பட்டிருக்கும் என்பது வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தமிழக வருவாய் துறையில் உதவியாளர் வேலை – 5வது தேர்ச்சி பெற்றவரா? விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஏப்ரல் 15 (வங்கி விடுமுறை) – புனித வெள்ளி
ஏப்ரல் 16 – புனித சனிக்கிழமை
ஏப்ரல் 17 – ஈஸ்டர் ஞாயிறு
ஏப்ரல் 18 (வங்கி விடுமுறை) – ஈஸ்டர் திங்கள்

இதனை தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகையானது இங்கிலாந்தில் ஏப்ரல் 4 திங்கள் அன்று தொடங்கி ஏப்ரல் 18, 2022 அன்று முடிவடைகிறது. இதனால் வேல்ஸில், ஏப்ரல் 11 திங்கள் முதல் ஏப்ரல் 22 வெள்ளி வரை ஈஸ்டர் விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படும். அதே போல ஸ்காட்லாந்தில் இரண்டு வார இடைவெளியுடன் ஏப்ரல் 4 திங்கள் முதல் ஏப்ரல் 18 வரை விடுமுறை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு அயர்லாந்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 14 வியாழன் முதல் ஏப்ரல் 22 வெள்ளி வரை ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!