துரோகம் செய்த அண்ணாமலை, குமுறும் யூடியூபர் மதன் – கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்!
தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக, யூடியூபர் மதனுக்கு இதில் உள்நோக்கம் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.
பாலியல் விவகாரம்
சமீபகாலமாக தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக இருந்து வருவது பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ சர்ச்சை. அதாவது தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்பை வகித்து வந்த கே.டி.ராகவன் தொடர்புடைய ஒரு பாலியல் வீடியோ சில நாட்களுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை தொடர்ந்து தனது பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் இந்த குற்றசாட்டை சட்டரீதியாக சந்திப்பதாக கூறியிருந்தார்.
மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் இன்று பதவியேற்பு – தலைவர்கள் வாழ்த்து!
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வெளியான கே.டி.ராகவன் அவர்களின் பாலியல் தொடர்பிலான வீடியோவை பதிவிட்டது யூடியூபர் மதன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூறிய மதன், பாஜக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் கொடூர சம்பவங்களை வெளியே கொண்டு வர அந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுரைப்படி இதை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அண்ணாமலை பேசியவாறு உள்ள ஆடியோ பதிவுகளை வெளியிட்ட மதன், தேவை ஏற்படின் வீடியோ பதிவுகளையும் வெளியிடுவதாக கூறி, அவர் துரோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகிய இருவரும் பாஜக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மதன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ‘வீடியோவை வெளியிட்ட பிறகு கவனமான இருங்கள் என்றும், நான் உங்கள் பக்கம் தான் இருப்பேன்’ என்றும் அண்ணாமலை பேசியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த கருத்துக்களுக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வீடியோவை வெளியிட்டதில் மதனுக்கு ஏதும் உள்நோக்கம் இருக்கும் என சந்தேகம் எழுப்பியுள்ளார். எனினும் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அண்ணாமலை பேசிய ஆடியோ பதிவுகளும் பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.