அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் மாற்றம்!
தமிழகத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலையில்லா சூழல் நிலவி வருகிறது. எனவே முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கப்படவுள்ளது. தற்போதைய சூழலின்படி பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது.
PF கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? முக்கிய அறிவிப்பு! வரி விதிப்பு விபரங்கள்!
எனவே மாணவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை அனைத்து மாணவர்களுக்குமான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதுவரை பேராசிரியர்கள் மாணவர்களுக்கு அதிக அளவில் கற்பிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருந்தது. ஆனால் மாற்றப்படவுள்ள புதிய பாட திட்டத்தில் தொழில் துறையினரின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரேகைப்பதிவு இல்லாமல் பொருட்கள் பெறலாம்!
இந்திய தொழிற்கூட்டமைப்பு, மகேந்திரா, எல் அண்ட் டி போன்ற தொழிற்சாலைகளின் பங்களிப்பு புதிய பாடத்திட்டத்தில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துவதற்காக பாடத்திட்டம் மாற்றி அமைக்கவுள்ளது. இதன் மூலம் பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புதிய பாடத்திட்டங்கள் நிகழ் கல்வியாண்டிற்குள் எழுதி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.