அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பல்கலை நிர்வாகம் வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்க காலதாமதம் ஏற்படுவதால் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. மக்கள் அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் மருத்துவர்கள், களப்பணியாளர்கள், காவல்துறையினர், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை ஊசி போடப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு அந்தந்த துறைக்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்? பிரதமர் மோடி தொடர் ஆலோசனை!
இந்நிலையில் அண்ணா பல்கலைகழக ஆசிரியர்கள் மார்ச் 19 ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால் ‘கோவாக்சின்’ தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பம் எழுந்துள்ளது.