செமஸ்டர் முடிவுகளை அண்ணா பல்கலை உடனடியாக வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு
செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைகழகம் உடனடியாக வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருந்தது.
ஆனால் அதில் பல மாணவர்கள் தேர்வு எண்களை உள்ளீடு வெளியாகாமல் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என்றே காட்டியது. அதாவது தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதனால் மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களின் ரிசல்ட் மட்டுமே வெளியாகியுள்ளது.
இதற்கிடையே மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது மாணவர் சமுதாயத்தினரிடையே பெறும் கலக்கத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது.
இதனால் மாணவர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வு கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்