பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட் ! – அண்ணா பல்கலை அதிரடி

0
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட்

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட் ! – அண்ணா பல்கலை அதிரடி

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

கொரோனா பரவல் !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதனால் முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு நாடே முடங்கி விட்டது. இதன் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட கல்லூரிகள் அடுத்து எப்போது திறக்கப்படும், தேர்வுகள் நடத்தப்படும் ? என தெரியாமல் மூடியே கிடந்தது.

ஆனால் நாளுக்கு நாள் வைரஸ் தொற்றின் தாக்கமும் அதன் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே தான் சென்றது என்பதனால் கல்லூரிகள் பள்ளிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது எவ்வாறு ? மேலும் அடுத்த கல்வி ஆண்டினை தொடங்குவது எவ்வாறு ?? என அறியாமல் கல்வியாளர்களும் உயர்கல்வி துறையினரும் அலைமோதி கொண்டிருந்தனர்.

தேர்வுகள் ரத்து ?!

அதன் பிறகு தேர்வுகள் நடைபெறுவதற்கு ஏற்ற சூழல் இதுவல்ல என்று கருதி அனைவருக்கும் தேர்வில்லா தேர்ச்சி வழங்கப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற ஏற்பட்டு செய்யப்பட்டு அதன்படி தேர்வும் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ஆனது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பல மாணவர்கள் படுத்துக்கொண்டு பயமில்லாமல் தேர்வு எழுதியது தெரிய வந்துள்ளது. எனவே அண்ணா பல்கலை ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மாணவர்களுக்கு ஆப்சென்ட் !!

அதாவது பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை முறையாக எழுதாமல் படுத்துக்கொண்டும், டீக்கடையில் அமர்ந்து கொண்டும் தேர்வு எழுதியவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!