பருவத் தேர்வை தவற விட்டவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு – அண்ணா பல்கலை அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி
கொரோனா வைரஸ் பரவலினால் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. அந்த தேர்வினை எழுதாமல் தவற விட்டவர்களுக்கு தற்போது மீண்டும் மறுதேர்வு நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்லூரி தேர்வு !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. அண்ணா பல்கலை ஆனது ஆன்லைனில் நடத்திய அந்த தேர்விற்கான முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
மறுதேர்வு !
ஆனாலும் ஆன்லைனில் நடந்த அந்த தேர்வினை 90% மாணவர்கள் மட்டுமே எழுதினர். தேர்வு எழுதுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் சரியில்லாத இணைய வசதி போன்ற பல்வேறு காரணங்களினால் மீதமுள்ள மாணவர்களால் தேர்வினை எழுத முடியவில்லை.
எனவே அவ்வாறு தேர்வினை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக தற்போது மீண்டும் மறுதேர்வு நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. அந்த தேர்வுகள் வரும் நவம்பர் 17 முதல் 21 வரை நடைபெற இருப்பதாகவும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |