இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடக்கும் – அண்ணா பல்கலை திட்டவட்டம்

0
இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடக்கும் - அண்ணா பலகலை திட்டவட்டம்
இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடக்கும் - அண்ணா பலகலை திட்டவட்டம்

இறுதி ஆண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடக்கும் – அண்ணா பல்கலை திட்டவட்டம்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. 5 மாதங்கள் முடிவடையவுள்ள நிலையில் இன்னும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் யாவும் திறக்கப்படாமலேயே உள்ளது.

மாணவர்களுக்கு தேர்வுகளானது அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அரியர் தேர்வுகள் முதற்கொண்டு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் இறுதி பருவ தேர்வுகள் மட்டும் கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்களும் இறுதி பருவ தேர்வு நடத்துவது பற்றிய விவாதத்திலும், ஆராய்ச்சியிலும் உள்ள நிலையில் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்ற ஒரு ஆலோசனையும் உள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் ஆனது இறுதி பருவ தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. இதனால் தேர்வர்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!