பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செய்முறைத் தேர்வுகள் தேதி 2020 – விதிமுறைகள் வெளியீடு
பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் செய்முறைத் தேர்வுகள் நடத்துவதற்கான தேதி மற்றும் விதிமுறைகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. விதிமுறைகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
செய்முறைத் தேர்வுகள் :
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான விதிமுறைகளும் வெளியாகி உள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
TN Police “FB Group” Join Now
விதிமுறைகள் :
- டிசம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை இந்த செய்முறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
- செய்முறைத் தேர்வுகள் இணையம் மூலம் பிரபல வீடியோ சேவைகள் மூலம் நடத்தப்பட வேண்டும்.
- ஆய்வக பாடத்திட்டன் அடிப்படையில் புற மதிப்பீட்டு வினாக்கள் அயலகத் தேர்வு கண்காணிப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.
- செய்முறைத் தேர்வுகளுக்கு பதில் அளிக்க மாணவர்கள் ஏ4 தாளினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இந்த ஆன்லைன் தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும்.
- தேர்வு எழுதி முடித்த பிறகு அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை தேர்வு நடத்துபவர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
- தேர்வு நடத்துபவர்கள் தேர்வுத்தாள் நகலை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
- அதனை மண்டல அலுவலகங்கள் கல்லூரி வாயிலாக பிரித்துவைத்து தேர்வு கட்டுப்பாடு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |