அண்ணா பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு – ஆளுநர் உத்தரவு!!

0
அண்ணா பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு - ஆளுநர் உத்தரவு!!
அண்ணா பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு - ஆளுநர் உத்தரவு!!
அண்ணா பல்கலையை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு – ஆளுநர் உத்தரவு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் நேற்று மாலையுடன் முடிவந்தடைந்தது. அவர் மீதுள்ள புகார் காரணமாக அவருக்கு பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் அடுத்த துணைவேந்தரை நியமிக்கும் வரை பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்து கொள்ள வழிகாட்டுதல் குழுவை நியமிப்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தன.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே புதிய துணைவேந்தரை நியமிக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய சிண்டிகேட் குழு கூடி இந்த வழிகாட்டுதல் குழுவை தேர்வு செய்வதற்கான பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் 3 பேர் கொண்ட ஒரு வழிகாட்டுதல் குழுவை நியமித்துள்ளார்.

சென்னை பல்கலையில் 20 புதிய ஆன்லைன் படிப்புகள் – துணைவேந்தர் அறிவிப்பு!!

அதில் பதிவாளர் கருணாமூர்த்தி, உயர்கல்வி செயலாளர் அபூர்வா, பேராசிரியர் ரஞ்சினி பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த மூவர் அடங்கிய குழு நிர்வாகத்தை கவனிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!