அண்ணா பல்கலை 69% இடஒதுக்கீடு குறித்த வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு ரத்து:
மத்திய அரசு சார்பில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான 49.5% இடஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகமே அகில இந்திய நுழைவு தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்க மறுத்த தமிழக அரசு 69% இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துமாறு அண்ணா பல்கலைக்கு உத்தரவிட்டது.
CBSE 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
இந்த உத்தரவிற்கு மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் எம்.பில் படிப்புகளில் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.
தமிழகத்தில் மே இறுதியில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!
எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனு குறித்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அதில் மனு குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்