தமிழகத்தில் M.E, M.Tech படிப்புகளில் சேர காத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மேலும் பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்க உள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும். இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் ஜூலை 22 ந் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.
WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் – 2 நாட்கள் வரைக்கும் Message Delete செய்து கொள்ளும் வசதி!
இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 31 ந் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம். மேலும் ஆகஸ்ட் 16 முதல் 18 ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் M.E, M.Tech படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. அதாவது M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேர www.annauniv.edu/tanca2022 என்றஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு , அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET ) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்துகிறது. இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.