அண்ணா பல்கலை முதுநிலை மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பயின்ற முதுநிலை மாணவர்கள் அனைவரும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
மறுமதிப்பீடு:
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, சமீப காலமாக கொரோனா குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவித கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) உயர்வு!
மேலும், செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுதலாம் எனவும் அறிவித்திருந்தது. அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் இறுதியாக படித்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. இதனால் அதிகமான அரியர் வைத்த மாணவ,மாணவிகள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதியதன் காரணமாக அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று பயன் பெற்றனர்.
மேலும், முதுநிலை மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் 2021 நவம்பர் முதல் டிசம்பர் பருவத் தேர்வுகள் எழுதிய முதுநிலை மற்றும் முனைவர் படிப்பு மாணவர்கள், இதில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி மறுமதிப்பீட்டு கட்டணமாக ரூ.400 ஐ செலுத்தி அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் இணையதளம் சென்று ஆன்லைன் மூலமாக இன்று முதல் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஒரு மாணவன் அல்லது மாணவி அதிகபட்சமாக 5 பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.